இந்த வருட ஐபிஎல் போட்டியின் முதல் ஆட்டத்தில் சிஎஸ்கே - மும்பை அணிகள் விளையாடின. இந்த ஆட்டத்தை அதிகப் பார்வையாளர்கள் பார்த்துள்ளார்கள்.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் முதல் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பா் கிங்ஸ் அணி, 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வென்றது.
இந்நிலையில் சிஎஸ்கே - மும்பை அணிகள் விளையாடிய ஆட்டத்தைத் தொலைக்காட்சியில் அதிகப் பார்வையாளர்கள் பார்த்துள்ளதாக பிசிசிஐயின் செயலாளர் ஜெய் ஷா கூறியுள்ளார். ட்விட்டரில் அவர் கூறியதாவது:
ஐபிஎல் போட்டியின் முதல் ஆட்டம் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது.
பார்க் ரேட்டிங்கின்படி 20 கோடி மக்கள் இந்த ஆட்டத்தைப் பார்த்துள்ளார்கள். எந்தவொரு நாட்டிலும் எந்தவொரு விளையாட்டு லீக் போட்டியின் முதல் ஆட்டத்துக்கும் இந்த ரேட்டிங் கிடைத்ததில்லை என்று கூறி தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.