ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில் பங்கேற்பதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் மைதானத்துக்குப் புறப்பட்டுள்ளனர்.
கரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில், நீண்ட தாமதத்துக்குப் பிறகு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்று (சனிக்கிழமை) அபுதாபியில் தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. போட்டி துவங்க சுமார் 1 மணி நேரமே உள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் மைதானத்துக்குப் புறப்பட்டுள்ளனர்.
வீரர்கள் மைதானத்துக்குப் புறப்படுவதை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புகைப்படத் தொகுப்பாகவும், மும்பை இந்தியன்ஸ் அணி விடியோவாகவும் தங்களது சுட்டுரைப் பக்கங்களில் பதிவிட்டுள்ளனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ்:
மும்பை இந்தியன்ஸ்: