ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
13-வது ஐபிஎல் சீசனின் இன்றைய (சனிக்கிழமை) 2-வது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்ற ஹைதராபாத் கேப்டன் டேவிட் வார்னர் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார்.
டாஸ் வென்றிருந்தால், நாங்களும் பேட்டிங்கைத்தான் தேர்வு செய்திருப்போம் என பெங்களூரு கேப்டன் விராட் கோலி தெரிவித்தார்.
ஹைதராபாத்தில் விஜய் சங்கருக்குப் பதில் அபிஷேக் சர்மா சேர்க்கப்பட்டுள்ளார். பெங்களூருவில், ஷிவம் துபே மற்றும் டேல் ஸ்டெயினுக்குப் பதில் முறையே நவ்தீப் சைனி மற்றும் இசுரு உடானா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.