ஐபிஎல்-2020

காயம்: ஐபிஎல் போட்டியிலிருந்து விலகினார் டுவைன் பிராவோ

DIN


துபை: சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் டுவைன் பிராவோ, தொடைப்பகுதி தசையில் ஏற்பட்ட காயம் காரணமாக ஐபிஎல் போட்டியிலிருந்து விலகுவதாக அணி நிர்வாகம் தெரிவித்தது. 
ஏற்கெனவே தொடர் தோல்விகளால் துவண்டு, பிளே-ஆஃப் வாய்ப்பை ஏறத்தாழ இழந்துவிட்ட சென்னைக்கு, பிரோவோ விலகல் மேலும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. 
சென்னையில் நீண்ட காலம் விளையாடி வரும் மேற்கிந்தியத் தீவுகள் வீரரான பிராவோ, பல்வேறு ஆட்டங்களில் அணியின் வெற்றிக்கு பிரதானமாக பங்களித்துள்ளார். பேட்டிங்கில் கணிசமான ரன்களை குவிக்கும் அவர், நெருக்கடியான "டெத் ஓவர்'களின்போது சிறப்பாக பந்து வீசக் கூடியவர். 
நடப்பு சீசனில் தாமதமாக அணியில் இணைந்த பிரோவோ 6 ஆட்டங்களில் மட்டுமே விளையாடினார். அதில் 2 ஆட்டங்களில் பேட்டிங் செய்து 7 ரன்கள் மட்டுமே எடுத்தார். எனினும் பெளலிங்கில் சிறப்பாக பங்களிப்பு செய்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 
சில நாள்களுக்கு முன் டெல்லி கேப்பிடல்ஸýக்கு எதிரான ஆட்டத்தின்போது காயம் காரணமாக அவரால் கடைசி ஓவரை வீச முடியவில்லை. ரவீந்திர ஜடேஜா வீசிய அந்த ஓவரில் வெற்றி டெல்லி வசமானது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாய்க்கு புலி வேடமிட்டு பொதுமக்களை அச்சுறுத்திய இளைஞர்கள்: காவல்துறையினர் விசாரணை

வானாவில்லின் கோலம்...!

20 ஆண்டுகளில் கேசிஆர் குடும்பம் போட்டியிடாத முதல் தேர்தல்? முழு அலசல்!

மிட்செல் மார்ஷுக்குப் பதிலாக மாற்று வீரரை அறிவித்த தில்லி கேப்பிடல்ஸ்!

திருமண உடையை மாற்றியமைத்த நடிகை சமந்தா!

SCROLL FOR NEXT