ராஜஸ்தானுக்கு எதிரான இந்த ஆட்டம், ஐபிஎல் தொடரில் எம்.எஸ். தோனியின் 200-ஆவது ஆட்டமாகும்.
இதுகுறித்து ஆட்டத்துக்கு முன்பாக பேசும்போது, "இப்போதுதான் இந்தத் தகவலை அறிகிறேன். இது சிறப்பாக உணர்வாக இருந்தாலும், இத்தனை நீண்டகாலம் காயம் இன்றி விளையாடியது அதிருஷ்டம் என எண்ணுகிறேன்' என்றார்.
ஐபிஎல் போட்டி தொடங்கிய 2008- முதல் சென்னை அணி கேப்டனாக தோனி இருந்து வருகிறார். சூதாட்ட புகார் சர்ச்சையில் சென்னை அணிக்கு 2 ஆண்டு தடை விதிக்கப்பட்டபோது, ரைசிங் புணே சூப்பர் ஜெயன்ட்ஸ் கேப்டனாக தோனி இருந்தார்.
ஐபிஎல் போட்டியில் அதிகமுறை விளையாடிய வீரர்கள் பட்டியலில் தோனிக்கு அடுத்த இடத்தில் சுரேஷ் ரெய்னா (194 ஆட்டங்கள்) உள்ளார்.