ஐபிஎல்

குங்ஃபு பாண்டியாவை குறைத்து மதிப்பிடாதீர்கள்: ஹார்திக் மனைவி

DIN

ஐபிஎல் 2022 கோப்பையை ஹார்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணி வென்றது குறித்து ஹார்திக்கின் மனைவி நடாஷா தெரிவித்துள்ள கருத்து வைரலாகி வருகிறது.

நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் இறுதி ஆட்டம் அகமதாபாத் நகரிலுள்ள நரேந்திர மோடி திடலில் நடைபெற்றது. அனைவரும் எதிர்பார்த்திருந்த இறுதி ஆட்டத்தில், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி ஹார்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி பெற்றது.

இதனால், கேப்டன் ஹார்திக் பாண்டியாவுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், ஐபிஎல் கோப்பையை வென்றது குறித்து அவரது மனைவி நடாஷாவும் வாழ்த்து தெரிவித்து தன்னுடைய மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார்.

ஐபிஎல் தொடரை வென்றது தொடர்பாக தொடர்பாக ஹார்திக் பாண்டியாவின் நேர்காணல் காணொலியை நடாஷா பகிர்ந்துள்ளார். அதில், ஹார்திக் பாண்டியா தனது அணியை தன்னுடைய பாணியில் கொண்டுவருவதற்கு அவர் மேற்கொண்ட சிரமங்கள் குறித்து விளக்கியுள்ளார். இந்த காணொலியைப் பகிர்ந்து ''ஹார்திக்  குங்ஃபு பாண்டியாவை குறைத்து மதிப்பிடாதீர்கள்'' எனக் குறிப்பிட்டு நடாஷா பகிர்ந்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சட்டவிரோதமாக அழைத்துச் செல்லப்பட்ட 95 குழந்தைகள் அயோத்தியில் மீட்பு

ராஞ்சியில் பள்ளி பேருந்து கவிழ்ந்து 15 மாணவர்கள் காயம்!

மணிப்பூரில் வன்முறை: 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழப்பு

ஈரோட்டில் மரக்கடை, பர்னிச்சர் கடையில் தீ: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

ரூ.4 கோடி சிக்கிய வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!

SCROLL FOR NEXT