ஐபிஎல்

மைதானம் புறப்பட்டது ரோஹித் படை!

DIN


ஐபிஎல் 2-ம் பகுதியின் முதல் ஆட்டத்தில் விளையாடவுள்ள ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி மைதானத்துக்குப் புறப்பட்டது.

இந்தியாவில் நடைபெற்ற 14-வது ஐபிஎல் சீசன் கரோனா பாதிப்பு அச்சுறுத்தல் காரணமாக தடைபட்டது. 2-ம் பகுதி ஆட்டங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கவுள்ளது. முதல் ஆட்டத்தில் பலம் வாய்ந்த சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

இந்த ஆட்டத்தில் பங்கேற்பதற்கான மும்பை இந்தியன்ஸ் அணி விடுதியிலிருந்து துபை மைதானத்துக்குப் புறப்பட்டது. இதன் விடியோவை அணி நிர்வாகம் பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

ஐபிஎல் முதல் பகுதி ஆட்டங்கள் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 ஆட்டங்களில் விளையாடி 5 வெற்றிகள் பெற்று புள்ளிகள் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணி 7 ஆட்டங்களில் விளையாடி 4 வெற்றிகளைப் பெற்று புள்ளிகள் பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாரா துப்பாக்கி சுடுதல்: மோனாவுக்கு தங்கம்

சேவைகளைக் கட்டுப்படுத்தும் விவகாரம் மத்திய சட்டத்திற்கு எதிரான தில்லி அரசின் மனுவை பட்டியலிட பரிசீலிக்கப்படும்: உச்சநீதிமன்றம் உறுதி

மேயா், துணை மேயா் பதவிக்கான தோ்தலை நடத்த ஆம் ஆத்மி கட்சிதான் விரும்பவில்லை: எதிா்க்கட்சித் தலைவா் ராஜா இக்பால் சிங்

மேயா் தோ்தல் ஒத்திவைக்கப்பட்டதால் தில்லி மாநகராட்சிக் கூட்டத்தில் சலசலப்பு

உலகக் கோப்பை வில்வித்தை: இந்தியாவுக்கு 4-ஆவது பதக்கம் உறுதி

SCROLL FOR NEXT