கிரிக்கெட் உலகக் கோப்பை-2019

மீண்டும் முதலிடம்: 500 ரன்களை எடுத்தார் வார்னர்

DIN


நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியாவின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் 500 ரன்கள் எடுத்து அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் வரிசையில் முதலிடத்தில் உள்ளார். 

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய (செவ்வாய்கிழமை) ஆட்டத்தில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் மார்கன் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணிக்கு வார்னர் மற்றும் ஃபின்ச் மீண்டும் ஒரு நல்ல தொடக்கத்தை தந்தனர். 

இந்த ஆட்டத்தில் வார்னர் 53 ரன்கள் எடுத்தார். ஃபின்ச் 100 ரன்கள் எடுத்தார். இதன்மூலம், நடப்பு உலகக் கோப்பையில் அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மேன்கள் வரிசையில் வார்னர் மற்றும் ஃபின்ச் முறையே முதலிரண்டு இடத்துக்கு முன்னேறியுள்ளனர். 

53 ரன்கள் எடுத்த வார்னர் 500 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார். சதம் அடித்த ஃபின்ச் 496 ரன்களுடன் 4 ரன்கள் பின்தங்கி 2-வது இடத்தில் உள்ளார். ஷாகிப் அல் ஹசன் 476 ரன்களுடன் 3-வது இடத்தில் உள்ளார். இந்த ஆட்டத்தில் சொதப்பிய இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஜோ ரூட் 432 ரன்களுடன் 4-வது இடத்தில் உள்ளார். 

இந்திய அணியில் ரோஹித் சர்மா 4 ஆட்டங்களில் விளையாடி 320 ரன்களுடன் 7-வது இடத்தில் உள்ளார். 

இதில், வார்னர் மற்றும் ஃபின்ச் 7 ஆட்டங்களில் விளையாடியுள்ளனர், ஆனால், ஷாகிப் 6 ஆட்டங்களில் தான் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பள்ளிகளில் குழந்தைகளை அடித்தாலோ, திட்டினாலோ நடவடிக்கை எடுக்கப்படும்: கல்வித் துறை

ரஷியாவுக்கு உதவினால் பொருளாதாரத் தடைகள்

தென்னிந்திய நீா்தேக்கங்களில் நீா் இருப்பு: 10 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கடும் சரிவு

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

ராணுவத்தின் படுகொலை பற்றிய செய்தி: புா்கினா ஃபாசோவில் பிபிசி-க்குத் தடை

SCROLL FOR NEXT