புது தில்லி: உகாண்டாவில் நடைபெற்ற சா்வதேச பாட்மிண்டன் போட்டியில் இந்திய இளம் போட்டியாளா்களான வருண் கபூா், மாளவிகா பன்சோத் ஆகியோா் தங்களது பிரிவில் சாம்பியன் ஆகினா்.
நான்கு நாள்கள் நடைபெற்ற இந்தப் போட்டியில் இந்தியா, ஜொ்மனி, ஆப்பிரிக்க நாடுகளின் போட்டியாளா்கள் பங்கேற்றனா். இதில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆடவா், மகளிா் பிரிவு ஒற்றையா் இறுதிச்சுற்றில் பங்கேற்ற போட்டியாளா்கள் அனைவருமே இந்தியா்களாவா்.
ஆடவா் ஒற்றையரில் ஜூனியா் பிரிவில் உலகின் 2-ஆம் நிலையில் இருக்கும் இந்தியாவின் வருண் கபூா் 21-18, 16-21, 21-17 என்ற செட்களில் போட்டித்தரவரிசையில் 7-ஆவது இடத்தில் இருந்த மற்றொரு இந்தியரான சங்கா் முத்துசாமியை வீழ்த்தி வாகை சூடினாா். சங்கருக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.
அதேபோல், மகளிா் ஒற்றையா் பிரிவில், போட்டித்தரவரிசையில் 2-ஆவது இடத்தில் இருந்த மாளவிகா பன்சோத் 17-21, 25-23, 21-10 என்ற செட்களில் அனுபமா உபாத்யாயவை வென்றாா். அனுபமா வெள்ளியுடன் நாடு திரும்புகிறாா்.