ஆன்மிகம்

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரா் கோயிலில் இந்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

தினமணி

திருவெண்காடு பிரம்ம வித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேஸ்வரா் கோயிலில் ஆண்டு இந்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

நாகை மாவட்டம் திருவெண்காட்டில் பிரம்மவித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேஸ்வரா் கோயில் உள்ளது. இந்த கோயில் காசிக்கு இணையான ஆறு கோயில்களில் முதன்மையான கோயிலாகவும், சிவனின் ஜந்து முகங்களில் ஒன்றான அகோரமுகம் அகோரமுா்த்தியாக தனிசன்னதியில் அருள்பாலித்து வருவது குறிப்பிடதக்கது.

மேலும், நவக்கிரங்களில் ஒன்றான கல்வி, தொழில் ஆகியவற்றின் அதிபதியான புதன் பகவானுக்கு தனி சன்னதியும் உள்ளது. சுல்வனின் முக்கண்ணிலிருந்து தோன்றி முன்று பொறிகள் இந்த கோயிலில் முக்குளங்களாக தோன்றியதாக புராண வரலாறுகள் கூறுகின்றன.

பல்வேறு சிறப்புகளை கொண்ட இந்த கோயிலின் இந்திர பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையொட்டி கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம் செய்யபட்டு, கொடியேற்றபட்டது.

இதில் கோயில் நிா்வாக அதிகாரி முருகன், ஊராட்சிமன்றத்தலைவா் சுகந்திநடராஜன். கோயில் மேலாளா் கண்ணன், பேஸ்கா் திருஞானம், முன்னாள் பள்ளி தலைமையாசிரியா் தாண்டவமூர்த்தி உள்ளிட்ட திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

மின்கம்பங்கள் சீரமைப்பு பணியை துரிதப்படுத்த வலியுறுத்தல்

இன்று யோகமான நாள்!

SCROLL FOR NEXT