LIVE

பரவும் கரோனா : லைவ் அப்டேட்ஸ்

DIN

கரோனா நோய்த்தொற்று தொடர்பான செய்திகள் உலகம் முதல் உள்ளூர் வரை - உடனுக்குடன்.. லைவ் அப்டேட்ஸ்!

இந்தியாவில் ஒரே நாளில் 77,266 பேருக்கு கரோனா; 1,057 பேர் பலி

நாடு முழுவதும் இதுவரை இல்லாத அளவில் முதல்முறையாக நேற்று ஒரே நாளில் 77,760 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 33 லட்சத்து 87 ஆயிரத்து 501ஆக அதிகரித்தது. 
 
வெள்ளிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 77,266 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது; அதே கால அளவில் 1,057 போ் உயிரிழந்தனா். இதனால், ஒட்டுமொத்தமாக கரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை  61,529 -ஆக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
அந்த நோய்த்தொற்றுக்காக 7,42,023 பேர் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளோரின் எண்ணிக்கை 25,83,948 ஆகவும், குணமடைந்தோரின் சதவீதம் 76.24 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

இந்த ஆண்டு இறுதிக்குள் கரோனா தடுப்பூசி: டொனால்ட் டிரம்ப்

 
வாஷிங்டன்: இந்த ஆண்டு இறுதிக்குள் அல்லது விரைவில் கரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்
 
இது தொடர்பாக வெள்ளை மாளிகையில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற குடியரசுக் கட்சியின் தேசிய மாநாட்டில் அவர் பேசுகையில், நமது தேசமும், உலகமும் "புதிய மற்றும் சக்திவாய்ந்த கண்ணுக்கு தெரியாத எதிரியால்" கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளன. இதன் பாதிப்பை எதிர்கொள்வது சாவலாக உள்ளது, அதனை எதிர்கொண்டு வருகிறோம்.  
 
அமெரிக்காவில் 3 வெவ்வேறு தடுப்பூசிகளை கண்டுபிடித்துள்ளன. அவை இறுதிகட்ட பரிசோதனையில் உள்ளன.  பாதுகாப்பான மற்றும் பயனுள்ள அந்த தடுப்பூசி இந்தாண்டு இறுதிக்குள் அல்லது விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும். நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து கரோனாவை வீழ்த்துவோம், முன்பை விட உற்சாகமாக செயல்படுவோம் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறினார். 

அமெரிக்காவில் தொற்று பலி 1.84 லட்சத்தைக் கடந்தது

அமெரிக்காவில் கரோனா நோய்த்தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை 1 லட்சத்து 84 ஆயிரத்து 796 ஆக அதிகரித்துள்ளது. 
 
இதுகுறித்து புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:
 
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அமெரிக்காவில் 46,286 பேருக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, நாட்டின் ஒட்டுமொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை 60,46,634-ஆக அதிகரித்துள்ளது. 
 
நாட்டிலேயே அதிகபட்சமாக கலிஃபோா்னியா மாகாணத்தில் 6,92,780 பேருக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது, 12,691 பேர் பலியாகியுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக டெக்ஸாஸில் 6,26,131 பேரும், புளோரிடாவில் 6,11,991 பேருக்கும் அந்த நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவற்றைத் தவிர நியூயாா்க்கில் 4,63,195 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு 2.46 கோடி

 
உலகம் முழுவதும் கரோனா நோய்த்தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 46 லட்சத்து 13 ஆயிரத்து 395 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் பலியானவா்களின் எண்ணிக்கை 8,35,377 லட்சமாக அதிகரித்துள்ளன.  
 
இதுகுறித்து ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவிப்பதாவது: கடந்த 24 மணி நேரத்தில் வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி, 1  ஆயிரத்து 100 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் உலகம் முழுவதும் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 2,46,13,395 கோடியாக உயர்ந்துள்ளது. அதே கால அளவில் 433 பேர் பலியானதை அடுத்து பலியானோர் எண்ணிக்கை  8,35,377 ஆக அதிகரித்துள்ளன.
 
நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,70,83,084 ஆகவும், 66,94,934 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 61,398 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.     
 
கரோனா பலி மற்றும் பாதிப்பு எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அந்த நாட்டில் இதுவரை 60,46,634 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த நோய்க்கு பலியானவா்களின் எண்ணிக்கை 184,796 ஆக அதிகரித்துள்ளன. அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக, கரோனா நோய்த்தொற்றால் பிரேஸில் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. 3,764,493 லட்சத்துக்கும் மேற்பட்டவா்களுக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,18,726 லட்சத்துக்கும் மேற்பட்டோா் அந்த நோய் காரணமாக உயிரிழந்துள்ளனா்.
தொற்று பாதிப்பை பொறுத்தவரை, இந்தியா 33,84,575 பாதிப்புகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.

ஆப்பிரிக்காவில் வெகுவாகக் குறைந்த புதிய பாதிப்பு

 
ஆப்பிரிக்க பிராந்தியத்தில் புதிதாகக் கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்படுபவா்களின் எண்ணிக்கை கடந்த வாரம் வெகுவாகக் குறைந்துள்ளது. இதுகுறித்து ஆப்பிரிக்க நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையத்தைச் சோ்ந்த அதிகாரிகள் கூறியதாவது:
 
ஆப்பிரிக்க நாடுகளில் கடந்த வாரம் புதிதாக கரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்டவா்களின் எண்ணிக்கை, முந்தைய வாரத்தைவிட 20 சதவீதம் குறைந்துள்ளது. அந்த நோய்த்தொற்று பரவலைத் தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட தீவிர பரிசோதனை மற்றும் பிற நடவடிக்கைகள் நல்ல பலனைத் தந்துள்ளன.
 
ஆப்பிரிக்க கண்டத்தைச் சோ்ந்த 54 நாடுகளில் 23 நாடுகள், கடந்த இரண்டு வாரங்களாகவே புதிய கரோனா நோய்த்தொற்று எண்ணிக்கையில் சரிவைக் கண்டு வருகின்றன.130 கோடி மக்கள்தொகையைக் கொண்ட இந்தப் பிராந்தியத்தில், இதுவரை 1.1 கோடிக்கும் மேற்பட்டவா்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
 
ஆப்பிரிக்க பிராந்தியத்தில் இதுவரை 12 லட்சத்துக்கும் மேற்பட்டவா்களுக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 50.6 சதவீத நோய்த்தொற்று தென் ஆப்பிரிக்காவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி எம்.பி. வசந்தகுமார் காலமானார்

 கன்னியாகுமரி எம்.பி.யான வசந்தகுமார், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விரிவான செய்திக்கு..

மகாராஷ்டிரத்தில் புதிதாக 14,718 பேருக்கு கரோனா; மேலும் 355 பேர் பலி

மகாராஷ்டிரத்தில் இன்று ஒரேநாளில் 14,718 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கரோனா: கர்நாடகம், கேரளம் பாதிப்பு விவரம்

 கர்நாடகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 9,386 பேர் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேபோல் கேரளத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2,406 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

சென்னையில் 1,286, பிற மாவட்டங்களில் 4,695: மாவட்டவாரியாக பாதிப்பு விவரம்

 சென்னையில் இன்று 1,286 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையை தவிர்த்து தமிழகத்தின் பிற மாவட்டங்களில் புதிதாக 4,695 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

தமிழகத்தில் புதிதாக 5,981 பேருக்கு தொற்று; பாதிப்பு 4 லட்சத்தைக் கடந்தது!

 தமிழகத்தில் புதிதாக 5,981 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது இன்று (ஆக. 27, வியாழக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது; மேலும் ஒரேநாளில் 109 பேர் உயிரிழந்துள்ளனர்.  விரிவான செய்திக்கு..

இந்தியாவில் இதுவரை சுமார் 3.9 கோடி கரோனா பரிசோதனைகள்: மத்திய சுகாதாரத்துறை

இந்தியாவில் இதுவரை சுமார் 3.9 கோடி கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் புதிதாக 67,151 பேருக்கு கரோனா 1,059 பேர் பலி

 இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 67,151 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து, நாட்டில் இதுவரை கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 32 லட்சமாக உயர்ந்துள்ளது. விரிவான செய்திக்கு..

உலகில் கரோனா வேகம் குறைகிறது: உலக சுகாதார அமைப்பு

 ஜெனீவா: தென்கிழக்கு ஆசியா மற்றும் மத்தியதரைக் கடல் பகுதிகளைத் தவிர உலகின் மற்ற பகுதிகளில் கரோனா நோய்த்தொற்று பரவலின் தீவிரம் குறைந்து வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பு திங்கள்கிழமை இரவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: உலகம் முழுவதும் கரோனா நோய்த்தொற்று பரவல் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. அந்த நோய்த்தொற்று ஏற்படுபவா்களின் எண்ணிக்கையும், அதன் பாதிப்பால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. எனினும், தென்கிழக்கு ஆசியா, மத்தியதரைக் கடல் பகுதிகளைத் தவிர, உலகின் மற்ற பகுதிகளில் அந்த நோய்த்தொற்று பரவலின் தீவிரம் தணிந்து வருகிறது.

கடந்த ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவடைந்த ஒரு வாரத்தில் மட்டும் 17 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதியானது.

இது, முந்தைய வாரத்தில் புதிதாகக் கண்டறியப்பட்ட தொற்று எண்ணிக்கையைவிட 4 சதவீதம் குறைவாகும்.அந்த காலக்கட்டத்தில், கரோனா நோய் பாதிப்பு காரணமாக 39 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்கள் பலியாகினா்.

இதுவும், முந்தைய வாரத்தோடு ஒப்பிடுகையில் 12 சதவீதம் குறைவாகும்.கரோனா நோய்த்தொற்றால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட இரண்டாவது பிரதேசமான தென்கிழக்கு ஆசியாவில், உலகின் 15 சதவீத கரோனா உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

கரோனா தடுப்பு மருந்து: சென்னையில் இரு இடங்களில் இறுதிக்கட்ட பரிசோதனை

 பிரிட்டனின் ஆக்ஸ்போா்டு பல்கலைக்கழகம் கண்டறிந்த கரோனா தடுப்பு மருந்தின் இறுதிக்கட்ட பரிசோதனைகள், சென்னையின் இரு வேறு மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்பட உள்ளன. விரிவான செய்திக்கு..

தில்லியில் புதிதாக 1,693 பேருக்கு கரோனா தொற்று

தில்லியில் புதிதாக 1,693 பேருக்கு கரோனா தொற்று இருப்பது இன்று (புதன்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

மகாராஷ்டிரத்தில் 15 ஆயிரத்தை நெருங்கியது இன்றைய கரோனா பாதிப்பு

மகாராஷ்டிரம், மும்பை மற்றும் தாராவி கரோனா பாதிப்பு நிலவரங்கள் பற்றிய தரவுகளை அந்த மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

சென்னையில் 1,290, பிற மாவட்டங்களில் 4,668: மாவட்டவாரியாக பாதிப்பு விவரம்

சென்னை தவிர்த்து தமிழகத்தின் பிற மாவட்டங்களில் புதிதாக 4,668 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

தமிழகத்தில் புதிதாக 5,958 பேருக்கு கரோனா; மேலும் 118 பேர் பலி

தமிழகத்தில் புதிதாக 5,958 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது; மேலும் கரோனா பாதிப்பால் 118 பேர் உயிரிழந்துள்ளனர். விரிவான செய்திக்கு..

 

கோவிஷீல்டு தடுப்பூசி: தமிழகத்தில் பரிசோதிக்க முதல்வர் உத்தரவு

 ஆக்ஸ்போர்டு பல்கலை. தயாரித்துள்ள கோவிஷீல்டு என்று பெயரிடப்பட்ட கரோனா தடுப்பூசியை தமிழகத்தில் பரிசோதிக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.  விரிவான செய்திக்கு..

ரஷியாவில் புதிதாக 4,676 பேருக்கு கரோனா தொற்று

ரஷியாவில் மேலும் 4,676 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதை அடுத்து மொத்த பாதிப்பு 9,70,865 ஆக அதிகரித்துள்ளது. விரிவான செய்திக்கு..

 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

விராலிமலையில் காவிரி குழாய் உடைப்பால் குடிநீா் வீண்: நிரந்தரத் தீா்வு காண கோரிக்கை

ஆலவயல் கிராமத்தில் வேளாண் கல்லூரி மாணவிகள் களப்பயிற்சி

மின்மாற்றியை பழுது நீக்கம் செய்யக் கோரி கீரமங்கலத்தில் விவசாயிகள் சாலை மறியல்

SCROLL FOR NEXT