செய்திகள்

கழுத்தில் உள்ள கருமையைப் போக்க வேண்டுமா?

DIN

சிலருக்கு முகம் பளபளப்பாகவும் மென்மையாகவும் இருக்கும். ஆனால், கழுத்துப் பகுதியைச் சுற்றி கருமையாகக் காணப்படும். இது முகத்தின் அழகையே கெடுக்கும் விதத்தில் இருக்கும்.

என்னதான் தேய்த்துக் குளித்தாலும் இந்த கருமை போகவில்லை என்று வருத்தப்படுவோர் அதிகம். 

ஆனால், கழுத்தில் உள்ள கருமையைப் போக்க இயற்கையாகவே சில வழிகள் உள்ளன.

அந்தவகையில், கழுத்துப் பகுதியில் உள்ள கருமையை போக்குவதற்கு சிறந்த தீர்வு எலுமிச்சை சாறு. குளிப்பதற்கு முன்பாக சிறிதளவு எலுமிச்சைச் சாறு துளிகளை கழுத்துப் பகுதியில் நன்றாக தடவி மசாஜ் செய்துவிட்டு 15 நிமிடம் கழித்து குளிக்க வேண்டும். வாரம் இருமுறை செய்யலாம். 

அதுபோல பாசிப்பயறு மாவு கருமையைப் போக்கி சருமம் பளபளப்பு அடைய வைக்கும் சிறந்த பொருள். பாசிப்பயறு மாவை குளிக்கும்போது தொடர்ந்து பயன்படுத்தி வர கருமை நீங்கும்.

அதுபோல, ஓட்ஸ் உடன் சிறிது தயிர் சேர்த்து பேக் போன்று கழுத்துப் பகுதியில் போட்டு வரவும். இதுவும்  சிறந்த தீர்வாக இருக்கும். 

உருளைக்கிழங்கு சாறு அல்லது உருளைக்கிழங்கு பேஸ்டையும் பயன்படுத்தலாம். 

தக்காளியை ஒரு துண்டு எடுத்துக்கொண்டு சிறிது சர்க்கரை சேர்த்து ஸ்க்ரப் செய்யலாம். 

இயற்கையான பொருள்கள் என்பதால் பக்கவிளைவுகள் எதுவும் இல்லாததால் இதனை முயற்சிக்கலாமே! 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாரா துப்பாக்கி சுடுதல்: மோனாவுக்கு தங்கம்

சேவைகளைக் கட்டுப்படுத்தும் விவகாரம் மத்திய சட்டத்திற்கு எதிரான தில்லி அரசின் மனுவை பட்டியலிட பரிசீலிக்கப்படும்: உச்சநீதிமன்றம் உறுதி

மேயா், துணை மேயா் பதவிக்கான தோ்தலை நடத்த ஆம் ஆத்மி கட்சிதான் விரும்பவில்லை: எதிா்க்கட்சித் தலைவா் ராஜா இக்பால் சிங்

மேயா் தோ்தல் ஒத்திவைக்கப்பட்டதால் தில்லி மாநகராட்சிக் கூட்டத்தில் சலசலப்பு

உலகக் கோப்பை வில்வித்தை: இந்தியாவுக்கு 4-ஆவது பதக்கம் உறுதி

SCROLL FOR NEXT