செய்திகள்

நின்றுகொண்டே தண்ணீர் அருந்தக்கூடாது! ஏன் தெரியுமா?

DIN

மனிதர்கள் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களும் வாழ தண்ணீர் அத்தியாவசியத் தேவையாக இருக்கிறது. உடலை சீராக வைத்திருப்பதற்கு பெரிதும் உதவும் தண்ணீரை முறையாக அருந்தவில்லை என்றால் உடலில் பல பிரச்னைகள் ஏற்படும். இதனாலே, தினமும் குறைந்தது 8 முதல் 10 டம்ளர் தண்ணீர் அருந்த வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில், தண்ணீரை எவ்வாறான நிலையில் அருந்த வேண்டும் என்பது அவசியம் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய ஒன்று. அவசர உலகத்தில் நாம் பெரும்பாலானோர் நின்றுகொண்டு தான் தண்ணீர் அருந்துகிறோம். ஆனால், அவ்வாறு நின்று கொண்டு தண்ணீர் அருந்தக்கூடாது. தொடர்ச்சியாக, எப்போதுமே நின்று கொண்டு தண்ணீர் அருந்தினால் உடல் செயல்பாடுகள் பாதிக்கப்படும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். 

தண்ணீரை நின்று கொண்டு குடித்தால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பதைப் பார்க்கலாம்.. 

தண்ணீரை நின்று கொண்டு குடிப்பதால் முதலில் தாகம் அடங்காது. தண்ணீர் வயிற்றுப்பகுதிக்குச் சென்று பல இடங்களில் சிதறுவதால் வயிற்றுக்கோளாறு ஏற்படும். இரைப்பையும் பாதிக்கப்படும். தொடர்ச்சியாக செய்யும்பட்சத்தில் நரம்பு பிரச்னைகள் கூட ஏற்படும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.

மேலும், நுரையீரல் தொடர்பான பிரச்னைகள், அல்சர் போன்றவையும் ஏற்படலாம். தண்ணீரில் உள்ள மினரல்கள் உடல் உறுப்புகளுக்குச் செல்லாமல் நேரடியாக சிறுநீரகத்திற்கு சென்றுவிடுகிறது.

இதனால் மற்ற உறுப்புகள் இயங்கத் தேவையான தண்ணீர் குறைந்து உடல் உறுப்புகளின் செயல்பாடு தொய்வடையும். எனவே, தண்ணீரை அமர்ந்துகொண்டு கொஞ்சம் கொஞ்சமாக குடித்தால் உடலின் அனைத்து பகுதிகளிலும் சென்று சேரும். உடலில் அனைத்து உறுப்புகளும் சரியாக இயங்கும். நாம் சாப்பிடும்போது எவ்வாறு தரையில் கால்களை மடக்கி அமர்ந்து உண்கிறோமோ, அவ்வாறு தண்ணீரையும் அருந்துவது மிகவும் நல்லது. அவ்வாறு செய்யும் செய்தால் உடல் ஆரோக்கியத்துடன், புத்துணர்ச்சியுடன் இருக்கும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT