தற்போதைய செய்திகள்

வயதுவந்தோரில் 5% பேருக்கே இதுவரை தடுப்பூசி!

DIN

கரோனா நோய்த் தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாட்டில் தடுப்பூசி செலுத்தத் தொடங்கி 5 மாதங்களானபோதிலும் இதுவரை  வயதுவந்தோரில் சுமார் 5 சதவிகித மக்களுக்கே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

மத்திய நல்வாழ்வுத் துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட தகவல்களின்படி, இதுவரை நாட்டில் 5.03 கோடி பேருக்கு மட்டுமே இரு தவணை தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டிருக்கிறது. நாட்டின் மக்கள்தொகையில் வயது  வந்தோரின் எண்ணிக்கை 94 கோடிகள் என்பது குறிப்பிடத் தக்கது.

ஒரு தவணை மட்டும் தடுப்பூசி செலுத்திக் கொண்டோரின் எண்ணிக்கையையும் சேர்த்தால் 27.07 கோடி பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கிறது. இது நாட்டின் வயது வந்தோரின் மொத்த எண்ணிக்கையில் சுமார் நான்கில் ஒரு பங்கு.

உலகளவில் மக்களுக்கு முழுவதும் தடுப்பூசி செலுத்திய நாடுகளில் ஏறத்தாழ 80 நாடுகள், இந்தியாவைவிட முன்னிலையில் இருக்கின்றன.

நாடு முழுவதும் கடந்த ஒரு வாரத்தில் சராசரியாக ஒரு நாளில் 30.57 லட்சம் பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுவருகிறது. ஜூன் 14 முதல் தடுப்பூசி செலுத்தப்படுவோரின் எண்ணிக்கை குறைந்துவருவது கவலையளிப்பதாக மருத்துவ வல்லுநர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஒவ்வொரு நாளும் தடுப்பூசி செலுத்துவோரின் சராசரி அளவு, ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிட மே மாதத்தில் 40 சதவிகிதம் குறைவு என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கரோனோ நோய்த் தொற்றுப் பரவலைத் தடுக்க நாட்டில் கோவேக்சின், கோவிஷீல்டு, ஸ்புட்னிக் வி ஆகிய தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமெரிக்காவை ஆட்டுவிக்கும் ‘டிக் டாக்’

கேரளம், கா்நாடகத்தில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு: 88 தொகுதிகளுக்கு 2-ஆம் கட்ட தோ்தல்

நூறு சதவீத வாக்குப்பதிவை உறுதிப்படுத்துவோம்!

பி.இ.ஓ. பணியிடங்கள்: தற்காலிக பட்டியல் அனுப்பிவைப்பு

பேருந்துகள் நிறுத்தாமல் சென்றால் புகாா் தெரிவிக்க ‘149’

SCROLL FOR NEXT