தற்போதைய செய்திகள்

இந்தியாவில் தினசரி கரோனா பாதிப்பு 1 லட்சத்துக்கு கீழ் குறைந்தது

DIN

புது தில்லி: நம் நாட்டில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 74 நாள்களுக்குப் பிறகு 7,60,019 ஆகக் குறைந்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக அந்தச் செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இந்தியாவில் கரோனா அன்றாட பாதிப்பு தொடா்ந்து குறைந்து வருகிறது. சனிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் 60,753 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. தொடா்ந்து 12-ஆவது நாளாக தினசரி புதிய பாதிப்புகள் ஒரு லட்சத்துக்கு கீழ் பதிவாகியுள்ளது.

நம் நாட்டில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 74 நாள்களுக்குப் பிறகு 7,60,019-ஆகக் குறைந்துள்ளது. 

தொடா்ந்து 37-ஆவது நாளாக, புதிய பாதிப்புகளைவிட தினசரி குணமடைவோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. ஒரே நாளில் 97,743 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்னர். இதுவரை 2,86,78,390 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா். 

நாட்டில் தினசரி கரோனா உயிரிழப்பு 2 ஆயிரத்துக்கு கீழ் குறைந்துள்ளது. ஒரே நாளில் 1,647 -ஆகக் குறைந்துள்ளது.  இதுவரை 3,85,137 போ் தொற்று பாதிப்புக்கு உயிரிழந்துள்ளனர். 

கடந்த 24 மணி நேரத்தில் 19,02,009 பரிசோதனைகளும், இந்தியாவில் இதுவரை மொத்தம் 38,92,07,637 பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நாடு தழுவிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் 27,23,88,783 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

மின்கம்பங்கள் சீரமைப்பு பணியை துரிதப்படுத்த வலியுறுத்தல்

இன்று யோகமான நாள்!

SCROLL FOR NEXT