உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராகி வருவதாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
ஒளிப்பதிவு திருத்த சட்ட மசோதா குறித்து எனது கருத்துக்களை கேட்ட ஒன்றிய அரசுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார்.
மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் தில்லியில் தகவல் தொழில்நுட்பத் துறையின் நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் 2021-ஆம் ஆண்டு ஒளிப்பதிவு சட்டத் திருத்த மசோதா தொடர்பான தனது கருத்துகளை செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒளிப்பதிவு திருத்த சட்ட மசோதா குறித்து எனது கருத்துக்களை கேட்ட ஒன்றிய அரசுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார்.
மேலும், தமிழகத்தில் அடுத்து நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலுக்கு மக்கள் நீதி மய்யம் தயாராகி வருவதாகவும் கூறினார்.