மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியின் மகன் ஆஷிஷ் யெச்சூரி கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தில்லியிலுள்ள குருகிராம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று (ஏப்.22) அவர் உயிரிழந்துள்ளார். 34 வயதான ஆஷிஷ் யெச்சூரி பத்திரிகையாளராக பணியாற்றி வந்தார்.
தமது மகனின் இறப்பை சீதாராம் யெச்சூரி சுட்டுரைப் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். இது தொடர்பாக அவர் பதிவிட்டுள்ளதாவது,
''கரோனா வைரஸ் தொற்றால் இன்று காலை எனது மகன் ஆஷிஷ் யெச்சூரி உயிரிழந்ததை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். எனது மகனுக்கு சிகிச்சையும், எனக்கு நம்பிக்கையும் அளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
எனது மகனை கண்காணித்த மருத்துவர்கள், செவிலியர்கள், முன்களப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் உடன் இருந்த அனைவருக்கும் நன்றி'' என்று குறிப்பிட்டுள்ளார்.