முக்கியச் செய்திகள்

எழுவர் விடுதலை குறித்து மீண்டும் தீர்மானம்? அமைச்சர் ரகுபதி விளக்கம்

DIN

50 சதவிகிதத்தினருக்கு அதிகமான இடஒதுக்கீட்டிற்கு உச்சநீதிமன்றம் தடைவிதித்த நிலையில் தமிழகத்தில் 69 சதவிகித இடஒதுக்கீட்டை பாதுகாப்பது குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாநில சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்தார். 

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனான ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த மாநில சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, “எழுவர் விடுதலை குறித்து உரிய நடவடிக்கையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மேற்கொள்வார்” எனத் தெரிவித்தார். 

மேலும் தமிழக சட்டப்பேரவையில் எழுவர் விடுதலை குறித்து மீண்டும் தீர்மானம் நிறைவேற்றப்படுமா எனும் செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ரகுபதி தேவை ஏற்பட்டால் தமிழக அரசு தீர்மானத்தை நிறைவேற்றும் எனக் கூறினார்.

மேலும் மகாராஷ்டிரத்தின் மராத்தா இட ஒதுக்கீடு பிரச்னையையொட்டி தமிழகத்தில் உள்ள 69% இடஒதுக்கீட்டை பாதுகாப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிவித்த அமைச்சர் ரகுபதி இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கையை மாநில அரசு மேற்கொள்ளும் என உறுதியளித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

மின்கம்பங்கள் சீரமைப்பு பணியை துரிதப்படுத்த வலியுறுத்தல்

இன்று யோகமான நாள்!

மக்களவை 2-ஆம் கட்ட தோ்தல்: கேரளம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்குப் பதிவு தொடங்கியது!

SCROLL FOR NEXT