புதுச்சேரி முதல்வராக இன்று பொறுப்பேற்றுள்ள என்.ரங்கசாமிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் புதுச்சேரி முதல்வராக பொறுப்பேற்றுள்ள என்.ரங்கசாமிக்கு வாழ்த்துகள் என்று குறிப்பிட்டுள்ளார்.
I would like to congratulate Shri N.Rangasamy Ji on taking oath as Puducherry CM. Best wishes for the tenure ahead.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் 15வது சட்டப்பேரவைக்கான தேர்தல் முடிந்து, என்ஆர் காங்கிரஸ், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கிறது.
மொத்தமுள்ள 30 இடங்களில் இக்கூட்டணி 16 (என் ஆர் காங்கிரஸ் 10, பாஜக 6) இடங்களில் வெற்றி பெற்று பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்கிறது.
என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் என். ரங்கசாமி சட்டமன்ற குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டு முதல்வராக ஆளுநர் மாளிகையில் இன்று பொறுப்பேற்றார்.