கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து உயர் அதிகாரிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.
தமிழக முதல்வராக நாளை காலை மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின், அமைச்சரவைக் கூட்டம் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுடன் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தவுள்ளார்.
இந்த நிலையில், தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் தற்போது மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.