கர்நாடக மாநிலத்தில் 10ஆம் வகுப்பிற்கான பொதுத்தேர்வுகள் ஜூன் 21 முதல் தொடங்கப்படும் என்று மாநில கல்வித்துறை அமைச்சர் எஸ்.சுரேஷ் குமார் திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கரோனா பெருந்தொற்று காரணமாக அனைத்து கல்வி நிலையங்களும் மூடப்பட்டன. பின்னர் மத்திய அரசு அளித்த தளர்வுகளின் அடிப்படையில் மாநில அரசுகள் படிப்படியாக பள்ளிகள் திறக்கப்பட்டு தேர்வுகளுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
அந்தவகையில் கர்நாடக மாநிலத்திலும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், 12ஆம் வகுப்பிற்கான பொதுத்தேர்வுகள் மே 24 முதல் ஜூன் 10-ஆம் தேதி வரை நடைபெறும் என கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் பத்தாம் வகுப்பிற்கான பொதுத்தேர்வுகள் ஜூன் 21 முதல் ஜூலை 5ஆம் தேதி வரை நடைபெறும் என கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.