ஜம்மு - காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 காவலர்கள் உள்பட 4 பேர் பலியாகியுள்ளனர்.
ஜம்மு - காஷ்மீரின் சோம்பூரில் உள்ள அரம்போரா பகுதியில் தீவிரவாதிகளால் இன்று காலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் 2 காவலர்கள் மற்றும் 2 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 2 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த சம்பவம் குறித்து ஐ.ஜி. விஜய் குமார் கூறியது,
லஷ்கர் இ-தொய்பா அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர். இந்த துப்பாக்கிச்சூட்டில் 2 காவலர்கள், 2 பொதுமக்கள் பலியாகியுள்ளனர். மேலும் தப்பியோடிய தீவிரவாதிகளை ராணுவம் மற்றும் காவல்துறை இணைந்து தேடி வருவதாக தெரிவித்தார்.