பிலிப்பின்ஸில் வியாழக்கிழமை மாலை அதிதீவிர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 7.0 ஆகப் பதிவாகியுள்ளது.
பிலிப்பின்ஸின் பாண்டகுய்டன் நகருக்கு 210 கி.மீ. தொலைவில் வியாழக்கிழமை மாலை 5.53 மணியளவில்(இந்திய நேரப்படி) நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டா் அளவுகோலில் அந்த நிலநடுக்கம் 7.0 அலகுகளாகப் பதிவானது.
இந்த நிலநடுக்கத்தால் குடியிருப்புப் பகுதிகளில் பயங்கர அதிர்வுகள் உணரப்பட்டுள்ளது. மேலும் பொருள்சேதம், உயிர்சேதம் குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.