ஹரியாணாவில் நாளைமுதல் புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மாலை 6 மணிக்கு மேல் கடைகள் மூடவேண்டும் என தெரிவித்துள்ளனர்.
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் ஹரியாணாவில் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகிறது.
கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் கட்டுப்பாடுகளை விதித்துக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்தது.
அந்தவகையில் ஹரியாணா சுகாதாரத்துறை அமைச்சர் அனில் விஜ் வெளியிட்ட டிவிட்டரில்,
ஹரியானாவில் நாளை மாலை 6 மணி முதல் அனைத்து கடைகளும் மூடப்படும், அத்தியாவசியமற்ற அனைத்து கூட்டங்களும் தடைசெய்யப்பட்டுள்ளன. நிர்ணயிக்கப்பட்ட வரம்பிற்குள் ஏதேனும் நிகழ்ச்சி நடத்த வேண்டுமென்றால் உரிய அதிகாரிகளிடம் ஒப்புதல் பெறவேண்டும் என தெரிவித்துள்ளனர்.