தமிழ் புத்தாண்டு, விஷு பண்டிகை முன்னிட்டு சபரிமலை கோவில் நடை இன்று மாலை திறக்கப்பட்டது.
பக்தர்களின் தரிசனத்திற்காக ஏப்ரல் 18 வரை நடை திறக்கப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை முதல் வழக்கம் போல் காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும் எனத் தெரிவித்துள்ளனர்.
மேலும், நாளொன்றுக்கு ஆன்லைன் மூலம் பதிவு செய்யும் 10 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவுள்ளது.
கரோனா இல்லை என்ற பரிசோதனை சான்றிதழுடன் வரும் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் எனத் தெரிவித்துள்ளனர்.