கேரள சட்டப்பேரவைத் தலைவர் ஸ்ரீராமகிருஷ்ணனுக்கு சனிக்கிழமை கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தொற்று பரவலைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும் பலரும் கரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கேரள சட்டப்பேரவைத் தலைவர் ஸ்ரீராமகிருஷ்ணனுக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 8ஆம் தேதி கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.