மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு கரோனா தொற்றில் இருந்து மீண்டதாக புதன்கிழமை தெரிவித்தார்.
இதுபற்றி சுட்டுரைப் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது:
"உங்கள் அனைவரின் ஆசீர்வாதத்தாலும், வாழ்த்துக்களாலும், நான் கரோனாவிலிருந்து மீண்டுள்ளேன் என்பதை உங்கள் அனைவருக்கும் சொல்வதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். மேலும், உங்கள் அனைவரின் பாசத்திற்கு நன்றி" என தெரிவித்தார்.
நிதின் கட்கரிக்கு கடந்த செப்டம்பர் 16 ஆம் தேதி கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டது குறிப்பிடத்தக்கது.