தில்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
ஐபிஎல்-இன் இன்றைய ஆட்டத்தில் தில்லி, சென்னை அணிகள் மோதுகின்றன. துபையில் நடைபெறும் இந்த ஆட்டத்தில், டாஸ் வென்ற சென்னை கேப்டன் மகேந்திர சிங் தோனி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார்.
சென்னை அணியில் காயம் காரணமாக ராயுடுவுக்குப் பதில் ருதுராஜ் சேர்க்கப்பட்டுள்ளார். நிகிடிக்கு பதில் இம்முறை ஜோஷ் ஹேசில்வுட் சேர்க்கப்பட்டுள்ளார்.
தில்லி அணியில் ஷிம்ரோன் ஹெத்மயர், மார்கஸ் ஸ்டாய்னில், ககிசோ ரபாடா மற்றும் அன்ரிச் நார்ஜே ஆகியோர் வெளிநாட்டு வீரர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.