லடாக்கில் வெள்ளிக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.4 ஆகப் பதிவாகியுள்ளது.
இன்று மாலை 4.27 மணியளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்திய எல்லைப் பகுதியான லடாக்கில் ஏற்பட்டதாக நிலநடுக்கவியல் தேசிய மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தால் இதுவரை எந்தவிதமான சேதமும், பாதிப்புகளும் ஏற்படவில்லை. மேலும் விவரங்கள் காத்திருக்கின்றன.