மத்திய சமூக நீதித்துறை அமைச்சர் ராம்தாஸ் அதவாலேவிற்கு செவ்வாய்க்கிழமை கரோனா தொற்று உறுதியானது.
ராம்தாஸ் அதவாலே இருமல் மற்றும் உடல் வலி ஆகிய அறிகுறிகள் இருந்ததால் கரோனா தொற்று பரிசோதனை செய்தார். அதைத் தொடர்ந்து, சோதனை முடிவில் தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதியானது.
தற்போது மும்பையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.