வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தெலங்கானா மாநிலத்திற்கு மேற்குவங்க மாநிலம் சார்பாக முதல்வர் வெள்ள நிவாரண நிதிக்கு முதற்கட்டமாக ரூ. 2 கோடி அறிவித்தார் முதல்வர் மம்தா பானர்ஜி.
இதுகுறித்து தெலங்கானா முதல்வருக்கு மம்தா எழுதிய கடிதத்தில்,
தெலங்கானா மாநிலம் கடந்த சில நாள்களாக பெய்த மழையால் பெரும் துயரில் ஆழ்ந்துள்ளது. இயற்கை பலர் குடும்ப உறுப்பினர்களையும், வீடுகளையும் இழந்துள்ளனர். அவர்களுக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.
தெலுங்கானா மக்களுடனான சகோதரத்துவம் மற்றும் ஒற்றுமையின் அடையாளமாக முதற்கட்டமாக ரூ. 2 கோடி முதல்வரின் வெள்ள நிவாரண நிதிக்கு அளிக்கின்றோம் என தெரிவித்துள்ளார்.