கர்நாடகத்தின் உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு டிசம்பர் 22 மற்றும் 27 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்ட செய்தியில்,
கர்நாடக மாநிலத்தில் உள்ள 5,762 பஞ்சாயத்திற்கான உள்ளாட்சித் தேர்தலின் வாக்குப்பதிவு இரண்டு கட்டங்களாக நடைபெறும். முதற்கட்ட வாக்குப்பதிவு டிசம்பர் 22ஆம் தேதியும், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு டிசம்பர் 27ஆம் தேதியும் நடைபெறும்.
மேலும் வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 30ஆம் தேதி நடைபெறும் என தெரிவித்துள்ளது.