குருநானக்கின் பிறந்த நாளை போராட்டக்காரர்கள் தில்லி எல்லைகளில் திங்கள்கிழமை கொண்டாடினர்.
சீக்கிய மதத்தை நிறுவிய குருநானக்கின் 551 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா சீக்கிய சமூகத்தினரால் நவம்பா் 27-ஆம் தேதி தொடங்கி மூன்று நாள்களாக கொண்டாடப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், பஞ்சாப் மற்றும் ஹரியாணாவைச் சேர்ந்த விவசாயிகள் தில்லியில் 5வது நாளாக விவசாய சட்டத்திற்கு எதிராக போராடி வருவதால், தில்லி எல்லைகளிலேயே குருநானக் விழாவின் இறுதி நாளை கொண்டாடினார்கள்.