தற்போதைய செய்திகள்

எர்ணாகுளம் மருத்துவக் கல்லூரி கரோனா சிகிச்சை மையமாக மாற்றம்

DIN

கொச்சி:  கரோனா வைரஸ் இந்தியாவில் அதிகயளவில் பரவி வரும் நிலையில், கேரளம் மாநிலம் கலாமாசேரியில் உள்ள எர்ணாகுளம் மருத்துவக் கல்லூரி முழு அளவில் கரோனா வைரஸ் சிகிச்சை மையமாக மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதையடுத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், அவசர வெளி நோயாளி (ஓபி) பிரிவு மற்றும் டயாலிசிஸ் பிரிவு மட்டுமே செயல்படும்.

மருத்துவமனையில் வெளி நோயாளி பிரிவில் சிகிச்சை பெறும் பெண்கள் மற்றும் குழந்தைகள் அருகிலுள்ள அரசு சுகாதார மையத்திற்கு மாற்றப்படுவார்கள் என தகவல் வெளியாகி உள்ளது.

மாவட்டத்தில் தற்போது வரை 12 கரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் 23 பேரும், வீடுகளில் 3961 பேரும் கண்காணிப்பில் இருந்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூருவில் ராகுல் திராவிட், அனில் கும்ப்ளே வாக்களித்தனர்

ஒளியிலே தெரிவது தேவதையா...!

ஆண் மனதை அழிக்க வந்த சாபம்!

2 ஆம் கட்ட வாக்குப் பதிவு: கேரளத்தில் 9 மணி நிலவரப்படி 11.98% வாக்குகள் பதிவு

விவிபேட் வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் அனைத்து மனுக்களும் தள்ளுபடி!

SCROLL FOR NEXT