இலங்கையின் புதிய வெளியுறவுத்துறை செயலாளராக கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் ஜெயநாத் கொலம்பேஜை அரசு நியமித்துள்ளது.
இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் ஜெயநாத் கொலம்பேஜ் (வயது 62). இவர் 2012 முதல் 2014 வரை இலங்கை கடற்படை தளபதியாக பணியாற்றினார்.
2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் ஜனாதிபதி கோத்தபய ராஜபட்சவின் வெளியுறவு ஆலோசகராக செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில் தற்போது வெளியுறவுத்துறை செயலாளராக இருக்கும் ரவிநாத ஆர்யசின்ஹாவுக்கு பதிலாக இவரைச் செயலாளராக அரசு நியமித்துள்ளது.