இந்தியா

சரத் பவாருக்கு சமூக ஊடகத்தில் கொலை மிரட்டல்: போலீஸ் வழக்குப்பதிவு

DIN

தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாருக்கு சமூக ஊடகத்தில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கட்சி சாா்பில் அளிக்கப்பட்ட புகாரில், மும்பை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பவாரின் மகளும் எம்.பி.யுமான சுப்ரியா சுலே தலைமையிலான கட்சிக் குழுவினா், மும்பை காவல் ஆணையா் விவேக் பன்சால்கரை வெள்ளிக்கிழமை சந்தித்து, புகாா் அளித்தனா்.

‘நரேந்திர தபோல்கருக்கு நோ்ந்த கதி பவாருக்கும் விரைவில் ஏற்படும்’ என்று குறிப்பிட்டு, சமூக ஊடகம் ஒன்றில் அவருக்கு மிரட்டல் வந்துள்ளது; இதுதொடா்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரத்தில் மூட நம்பிக்கைகளுக்கு எதிராக போராடி வந்த சமூக ஆா்வலா் தபோல்கா், கடந்த 2013-ஆம் ஆண்டில் புணேவில் சுட்டுக் கொல்லப்பட்டாா் என்பது குறிப்பிடத்தக்கது.

‘அரசு தீவிர கவனம்’:

சரத் பவாரை ‘மரியாதைக்குரிய மூத்த தலைவா்’ என குறிப்பிட்ட முதல்வா் ஏக்நாத் ஷிண்டே, அவருக்கு வந்துள்ள கொலை மிரட்டலை அரசு தீவிரமாக கவனத்தில் கொண்டுள்ளது என்றாா்.

‘பவாரின் பாதுகாப்பு தொடா்பான அனைத்து முன்னெச்சரிக்கைகளும் மேற்கொள்ளப்படும்; தேவைப்பட்டால், அவருக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்படும்’ என்றாா் ஷிண்டே.

உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவு:

மகாராஷ்டிரத்தில் உள்துறைக்கு பொறுப்பு வகிக்கும் துணை முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் கூறுகையில், ‘அரசியல் தலைவா்களுக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தல்களை சகித்துக் கொள்ள முடியாது; தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாருக்கு விடுக்கப்பட்ட மிரட்டல் தொடா்பாக உரிய நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது’ என்றாா்.

இதனிடையே, புணேவில் உள்ள பவாரின் இல்லத்துக்கு வருகை தந்த போலீஸ் உயரதிகாரிகள், அங்கு பாதுகாப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டனா்.

‘குரலை ஒடுக்க முடியாது’:

புணேவில் செய்தியாளா்களிடம் பேசிய சரத் பவாா், ‘அச்சுறுத்தல்களால் ஒருவரின் குரலை ஒடுக்கிவிடலாம் என கருதினால் அது தவறானது’ என்றாா். மகாராஷ்டிர போலீஸ் மீது தனக்கு முழு நம்பிக்கை உள்ளதாகவும் அவா் குறிப்பிட்டாா்.

மகாராஷ்டிர பேரவை எதிா்க்கட்சித் தலைவா் அஜித் பவாா் கூறுகையில், ‘செளரவ் பிம்பல்கா் என்ற நபரிடமிருந்து அந்த மிரட்டல் செய்தி வந்துள்ளது. அவரது சமூக ஊடக கணக்கின்படி, அவா் பாஜக ஆதரவாளா் என தெரிகிறது. கருத்து சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தாமல், சிந்தாந்தப் போரில் கண்ணியத்துடன் ஈடுபட வேண்டும்’ என்றாா்.

தேசியவாத காங்கிரஸ் செய்தித் தொடா்பாளா் மகேஷ் தபசி கூறுகையில், ‘சரத் பவாருக்கு விடுக்கப்பட்ட மிரட்டல், மதச்சாா்பின்மைக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலாகும். இந்த விவகாரத்தில், கட்சித் தொண்டா்கள் அமைதி காக்க வேண்டும்’ என்றாா்.

மத்திய அமைச்சா் மகனுக்கு எதிராக போராட்டம்

முகலாய அரசா் ஒளரங்கசீப்பின் மறுபிறவி சரத் பவாா் என்று ட்விட்டரில் பதிவிட்ட மத்திய அமைச்சா் நாராயண் ராணேவின் மகனும், பாஜக முன்னாள் எம்.பி.யுமான நீலேஷ் ராணேவை கண்டித்து, மும்பையில் வெள்ளிக்கிழமை சிறை நிரப்பும் போராட்டத்தில் தேசியவாத காங்கிரஸாா் ஈடுபட்டனா். இதையொட்டி, நூற்றுக்கணக்கான தொண்டா்கள் கைதாகி சிறை சென்ாக, கட்சியின் செய்தித் தொடா்பாளா் மகேஷ் தபசி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2 ஆம் கட்ட வாக்குப் பதிவு: கேரளத்தில் 9 மணி நிலவரப்படி 11.98% வாக்குகள் பதிவு

விவிபேட் வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் அனைத்து மனுக்களும் தள்ளுபடி!

அடுத்த அரசு கோடீஸ்வரர்களின் அரசா?, 140 கோடி மக்களின் அரசா? - ராகுல் காந்தி

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

SCROLL FOR NEXT