இந்தியா

ஜேஎன்யு பல்கலை.யில் 2 மாணவர்களை கடத்த முயற்சி; வெளிவாகனங்களுக்கு அனுமதியில்லை

DIN

தில்லியிலுள்ள ஜேஎன்யு பல்கலைக் கழகத்தில் நுழைந்து 2 மாணவர்களை மர்ம நபர்கள் கடத்த முயன்றதைத் தொடர்ந்து வளாகத்தில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. 

பல்கலைக்கழக வளாகத்தில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை வெளியிலிருந்து வரும் வாகனங்கள் உள்ளே வர அனுமதியில்லை என நிர்வாகம் அறிவித்துள்ளது. 

தில்லியிலுள்ள ஜவாஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் புதன்கிழமை இரவு 2 மாணவர்களை கடத்த வெளியிலிருந்து காரில் வந்த நபர்கள் முயன்றுள்ளனர்.

அவர்கள் குடித்துவிட்டு வளாகத்தில் வாகனத்தை இயக்கி வந்ததும் தெரியவந்துள்ளது. 

இதன் விளைவாக பல்கலைக் கழகத்தில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. வெளியிலிருந்து வரும் வாகனங்கள் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை அனுமதிக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. 

வளாகத்தில் தங்கியுள்ளவர்கள் தங்கள் அடையாள அட்டையை காண்பித்து உள்ளே வரலாம் எனவும் பல்கலைக் கழகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

மின்கம்பங்கள் சீரமைப்பு பணியை துரிதப்படுத்த வலியுறுத்தல்

இன்று யோகமான நாள்!

SCROLL FOR NEXT