இந்தியா

ஜி20: பெங்களூருவில் முதலாவது நிதியமைச்சர்கள் கூட்டம் தொடங்கியது!

DIN

இந்தியாவின் தலைமையில், ஜி20 நாடுகளின் முதலாவது நிதியமைச்சா்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநா்கள் கூட்டம், பெங்களூருவில் தொடங்கியுள்ளது.

பெரும் பொருளாதார நாடுகளை உள்ளடக்கிய ஜி20 கூட்டமைப்பின் தலைமையை இந்தியா வகித்து வருகிறது. இந்தியத் தலைமையின்கீழ் முதலாவது ஜி20 நிதியமைச்சா்கள், மத்திய வங்கி ஆளுநா்கள் கூட்டம் இன்றும், நாளையும் கா்நாடக மாநிலம், பெங்களூரில் நடைபெறுகிறது.

மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் மற்றும் இந்திய ரிசா்வ் வங்கி ஆளுநா் சக்திகாந்த தாஸ் ஆகியோா் இணைந்து இந்த கூட்டத்துக்கு தலைமை தாங்கி வருகின்றனர்.

ஜி20 உறுப்பு நாடுகளின் நிதியமைச்சா்கள், மத்திய வங்கி ஆளுநா்கள், சா்வதேச அமைப்புகளின் தலைவா்கள் உள்பட மொத்தம் 72 பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ள இந்த கூட்டத்தில் காணொலி மூலம் பங்கேற்று அனைவரையும் வரவேற்று பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை உரையாற்றினர்.

உலகின் சில முக்கிய பொருளாதாரப் பிரச்னைகளைத் தீா்ப்பதற்கான நடைமுறை, ஆக்கபூா்வ அணுகுமுறைகள் குறித்து அமைச்சா்கள் மற்றும் ஆளுநா்களிடையே முக்கியத்துவம் வாய்ந்த கருத்துப் பரிமாற்றம் நடைபெறும் வகையில், இந்தக் கூட்டத்துக்கான நிகழ்ச்சி நிரல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

21 ஆம் நூற்றாண்டின் உலகளாவிய சவால்களை எதிா்கொள்ள பல்வேறு நாடுகளின் வளா்ச்சி வங்கிகளை வலுப்படுத்துதல், டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பை மேம்படுத்துதல், நிதி உள்ளடக்கம் மற்றும் உற்பத்தி அதிகரிப்பு போன்றவை இந்த அமா்வில் விவாதிக்கப்பட்டு வருகின்றன. சுகாதாரம் மற்றும் சா்வதேச வரிவிதிப்பு தொடா்பான பிரச்னைகள் குறித்தும் ஆலோசிக்கப்படவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

மின்கம்பங்கள் சீரமைப்பு பணியை துரிதப்படுத்த வலியுறுத்தல்

இன்று யோகமான நாள்!

SCROLL FOR NEXT