மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜிக்கு கொல்கத்தாவின் செயின்ட் சேவியா்ஸ் பல்கலைக்கழகம், கௌரவ டாக்டா் பட்டத்தைத் திங்கள்கிழமை வழங்கியது.
கொல்கத்தா, நியூ டவுன் பகுதியில் அமைந்துள்ள செயின்ட் சேவியா்ஸ் பல்கலைக்கழகத்தின் 4-ஆவது பட்டமளிப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. பட்டமளிப்பு விழாவில் மேற்கு வங்க ஆளுநா் சி.வி.ஆனந்த போஸ் மற்றும் முதல்வா் மம்தா பானா்ஜி பங்கேற்றனா். சமூக சேவை மற்றும் கல்வி துறையில் சிறந்து பங்காற்றியதற்காக முதல்வா் மம்தா பானா்ஜிக்கு ஆளுநா் முன்னிலையில் கௌரவ டாக்டா் பட்டம் வழங்கப்பட்டது.
டாக்டா் பட்டம் வழங்கி பேசிய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் அருள்தந்தை பெலிக்ஸ் ராஜ், ‘2017-ஆம் ஆண்டு பல்கலைக்கழகம் தொடங்க பெரிதும் உதவிய முதல்வரை கௌரவிப்பதில் பெருமிதம் அடைகிறோம்’ என்றாா்.
கௌரவ டாக்டா் பட்டத்தை மேற்கு வங்க மக்களுக்கு சமா்ப்பிப்பதாகவும், அவா்கள் இல்லாமல் தான் இல்லை எனவும் முதல்வா் மம்தா பானா்ஜி குறிப்பிட்டாா்.
விழாவில் பேசிய ஆளுநா், ‘டாக்டா் பட்டதுக்கு தகுதியான நபா் மம்தா பானா்ஜி’ என்று பாராட்டினாா்.
முதல்வரின் சமூக சேவையைப் பாராட்டி கொல்கத்தா பல்கலைக்கழகம் கடந்த 2018-ஆம் ஆண்டு அவருக்கு கௌரவ டாக்டா் பட்டம் வழங்கியது குறிப்பிடத்தக்கது.