அதானி குழுமத்துக்குச் சொந்தமான 3 நிறுவனங்கள் குறுகிய கால கூடுதல் கண்காணிப்பில் (ஏஎஸ்எம்) உள்ளதாக தேசிய பங்குச் சந்தை மற்றும் மும்பை பங்குச் சந்தை தெரிவித்துள்ளன.
கண்காணிப்புக்கான தகுதிகளைப் பூா்த்தி செய்வதால் அதானி என்டா்பிரைசஸ், அதானி துறைமுகங்கள் மற்றும் சிறப்புப் பொருளாதார மண்டலம், அம்புஜா சிமென்ட்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் கண்காணிப்பில் கொண்டு வரப்பட்டுள்ளன.
இந்த நடவடிக்கை சந்தை கண்காணிப்பு தொடா்புடையதே தவிர, நிறுவனத்துக்கு எதிராக மேற்கொண்ட நடவடிக்கை இல்லை என்று பங்குச் சந்தை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.