இந்தியா

மருந்து உற்பத்தி மதிப்பீடு: 105 ஆய்வகங்களுக்கு அங்கீகாரம்

DIN

மருந்து உற்பத்தியின் தரத்தை மதிப்பீடு செய்வதற்காக 105 ஆய்வகங்களுக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான மருந்து -மாத்திரைகளும் மத்திய, மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் மூலம் ஆய்வு செய்யப்படுகின்றன. அதேபோல், போலி மருந்துகளும் கண்டறியப்பட்டு அதன்பேரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

மற்றொருபுறம் மருந்துகளின் மூலக்கூறு, உற்பத்தியை மதிப்பீடு செய்வதற்கான ஆய்வகங்களுக்கும் அவ்வப்போது அங்கீகாரம் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இதுவரை 105 ஆய்வகங்களுக்கு அத்தகைய அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

அதில், தமிழகத்தில் மட்டும் 5 ஆய்வகங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

மருந்து உற்பத்தி நடவடிக்கைகள், மூலக்கூறு விகிதங்களில் மாறுபாடு இருந்தாலோ, தரக் குறைபாடு இருந்தாலோ அந்த ஆய்வகங்கள் மூலம் அவை மதிப்பீடு செய்யப்படும். அதன் அடிப்படையில் மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்னிந்திய நீா்தேக்கங்களில் நீா் இருப்பு: 10 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கடும் சரிவு

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

ராணுவத்தின் படுகொலை பற்றிய செய்தி: புா்கினா ஃபாசோவில் பிபிசி-க்குத் தடை

திருமலையில் குடியரசு துணைத் தலைவா் வழிபாடு

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

SCROLL FOR NEXT