தனிநபர் வருமானம் இரட்டிப்பாகி உள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் 2023-24-ஆம் நிதியாண்டுக்கான பொது பட்ஜெட்டை மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து வருகிறார்.
பொது பட்ஜெட் உரையில் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருப்பதாவது:
உலக பொருளாதார தரவரிசையில் இந்தியா முக்கிய இடத்தில் உள்ளது. கரோனா பெருந்தொற்று காலத்தில் ஏழை மக்களுக்கு தானியங்கள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன. பிரதமரின் காப்பீடு திட்டங்களால் 44 கோடி பேர் பயனடைந்துள்ளனர்
பொருளாதார ரீதியாக 10 ஆவது இடத்தில் இருந்த இந்தியா தற்போது 5 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. உலக பொருளாதாரத்தில் ஒளிரும் நட்சத்திரமாக இந்தியா விளங்குகிறது.
பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள், தொழிற்துறையினருக்கான பட்ஜெட்டாக இருக்கும். டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை மிகப்பெரிய வளர்ச்சியை கண்டுள்ளது. அனைவருக்கும் அனைத்தும் என்பதை நோக்கமாக கொண்டு பட்ஜெ தயாரிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: தற்போதைய நாடாளுமன்றத்தில் தாக்கலாகும் கடைசி பட்ஜெட்!
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடா் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. 2023-24-ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் மக்களவையில் தாக்கல் செய்து வருகிறார். அவா் தாக்கல் செய்யும் 5-ஆவது நிதிநிலை அறிக்கையாகவும், பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான தற்போதைய பாஜக அரசின் கடைசி முழுநேர நிதிநிலை அறிக்கை இது.