மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட், மக்களின் நம்பிக்கைக்கு துரோகம் செய்யும் வகையில் இருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப. சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
2023 - 2024ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இது குறித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில், நடப்பாண்டுக்காக அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட், மக்களின் நம்பிக்கைக்கு துரோகம் செய்யும் வகையில் உள்ளதாக ப. சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
மேலும் அவர் பேசியதாவது, புதிய வரிமுறையை தேர்ந்தெடுத்தோருக்கு சிறிய எண்ணிக்கை தவிர வரிகள் குறைக்கப்படவில்லை. பெருமுதலாளிகளுக்கும் ஏழை மக்களுக்கும் இடையேயான வேறுபாட்டை மேலும் அதிகரிக்கும் வகையில் மத்திய பட்ஜெட் அமைந்துள்ளது. வேலைவாய்ப்பின்மை, வறுமை, சமத்துவமின்மைக்கான ஒரு அம்சங்களும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை எனக் குறிப்பிட்டார்.