இந்தியா

நாடாளுமன்றத்தில் இன்று.. ஒரு பக்கம் 'மோடி மோடி', மறுபக்கம் 'ஜோடோ ஜோடோ'

DIN

மத்திய அரசின் 2023-24-ஆம் நிதியாண்டுக்கான பொது பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பொது பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ச்சியாக ஐந்தாவது முறையாக தாக்கல் செய்துள்ளார்.

பொது பட்ஜெட்டை தாக்கல் செய்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உரையாற்றிக் கொண்டிருந்தபோது, ஒருபக்கம் மோடி மோடி என்ற கோஷமும், இதற்கு எதிராக மறுபக்கம் ஜோடோ ஜோடோ பாரத் ஜோடோ என்ற முழக்கமும் நாடாளுமன்றத்தில் எதிரொலித்தது.

பட்ஜெட் தாக்கல் செய்த போது, திடீரென பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மோடி மோடி என்று கோஷமிட்டனர். இதனை சற்றும் எதிர்பாராத காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சிறிதும் தாமதிக்காமல், ஜோடோ ஜோடோ பாரத் ஜோடோ என்று முழங்கினர்.

இதனைப் பார்க்கும் போது நாடாளுமன்றத்தில் மத்திய அரசுக்கு மிகச் சிறப்பான எதிர்தாக்குதல்களைக் கொடுக்கவும் செய்யவும் எதிர்க்கட்சிகள் மிகத் தயாராக வந்திருப்பதாகவே பார்க்கப்படுகிறது.

நாடாளுமன்றத்தில் எதிரொலிக்க பல பிரச்னைகள் காத்திருக்கும் நிலையில், இந்த கோஷங்கள் இன்று எதிரொலித்தன். 

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடா் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. 2023-24-ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் மக்களவையில் முற்பகல் 11 மணிக்கு தாக்கல் செய்து, 12.40 மணியளவில் நிறைவு செய்தார்.

அவா் தாக்கல் செய்தது 5-ஆவது நிதிநிலை அறிக்கையாகவும், பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான தற்போதைய பாஜக அரசின் கடைசி முழுநேர நிதிநிலை அறிக்கையாகவும் உள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT