இந்தியா

ராஞ்சி உயிரியல் பூங்காவில் விலங்குகளுக்குப் பருவகால பழங்கள், மல்டி வைட்டமின்கள்!

DIN

ஜார்க்கண்டில் வெப்பநிலை அதிகரித்துள்ள நிலையில் அதைச் சமாளிக்கும் வகையில் உயிரியல் பூங்காவில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 

ராஞ்சியில் பகவான் பிர்சா உயிரியல் பூங்காவில் உள்ள பிரபல பிர்சா உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளுக்கு ஏர் கூலர்கள், பருவகால பழங்கள், மல்டிவைட்டமின் மற்றும் போதுமான தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

ராஞ்சி வானிலை ஆய்வு மையத்தின் பொறுப்பாளர் அபிஷேக் ஆனந்த் கூறுகையில், 

ஜார்க்கண்டின் பெரும்பாலான பகுதிகளில் 40 டிகிரி செல்சியஸ் வெப்பம் நிலவி வருகின்றது. டல்டோங்கஞ்ச் மாவட்டத்தில் வெள்ளியன்று மாநிலத்தின் அதிகபட்ச வெப்பமாக 42.4 டிகிரி செல்சியஸ் பதிவானது. அதேநேரத்தில் ஜாம்ஷெட்பூரில் 42 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. 

தலைநகர் ராஞ்சியில் நேற்று அதிகபட்சமாக 38.8 டிகிரி செய்சியஸ் வெப்பநிலை பதிவானது. இது வழக்கத்தை விட 2.9 டிகிரி அதிகமாகும். 

ஜார்க்கண்டில் அடுத்த நான்று நாள்களக்கு அதிகபட்ச வெப்பநிலை பதிவாகும் மாற்றம் ஏற்பட வாய்ப்பட வாய்ப்பில்லை. 

பிர்சா உயிரியல் பூங்காவின் கால்நடை மருத்துவர் சாஹு கூறுகையில், 

கோடை வெப்பத்திலிருந்து விலங்குகளைப் பாதுகாக்கும் முயற்சியில், மாமிச உண்ணிகள், குறிப்பாக சிங்கங்கள், புலிகள், சிறுத்தைகள் மற்றும் இமயமலைக் கரடிகளுக்கு ஏர்-கூலர்கள் போன்ற பல முயற்சிகளைச் செய்யப்பட்டுள்ளது. 

நேரடி சூரிய வெப்பத்திலிருந்து பாதுகாக்க நிழல்களும் உருவாக்கப்பட்டுள்ளன.

மாமிச உண்ணிகளின் இறைச்சி உட்கொள்ளல் தினசரி உணவிலிருந்து 2 கிலோ குறைக்கப்பட்டுள்ளது.

தாவர உண்ணிகள் தங்கள் உடலை நீரேற்றமாக வைத்திருக்க தர்பூசணி, வெள்ளரி மற்றும் பிற பருவகால பழங்கள் வழங்கப்படுகின்றன. மல்டி வைட்டமின்கள், குடிநீர் மற்றும் குளுக்கோஸ் ஆகியவையும் வழங்கப்படுகிறது என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

சென்னை பல்கலை. செயல்பாடுகள்: பொதுக் குழுவில் விவாதிக்க முடிவு

ஹுமாயூன் மஹாலில் சுதந்திர தின அருங்காட்சியகம்: மக்களுக்கு தமிழக அரசு வேண்டுகோள்

பாஜக நிா்வாகிக்கு கொலை மிரட்டல்: நிா்வாகிகள் மீது 5 பிரிவுகளில் வழக்கு

கோரமண்டல் இன்டா்நேஷனல் தலைவராக அருண் அழகப்பன் நியமனம்

SCROLL FOR NEXT