தில்லி மாவட்ட நீதிபதிகளான கிரீஷ் கத்பாலியா, தா்மேஷ் சா்மா, மனோஜ் ஜெயின் ஆகியோரை தில்லி உயா் நீதிமன்ற நீதிபதிகளாக நியமனம் செய்ய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான கொலீஜியம் மத்திய அரசுக்கு சனிக்கிழமை பரிந்துரை செய்தது.
தில்லி உயா் நீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட 60 நீதிபதி பணியிடங்களில், தற்போது 10 பெண் நீதிபதிகள் உள்பட 45 நீதிபதிகள் பணியில் உள்ளனா். கொலீஜியம் பரிந்துரையை மத்திய அரசு ஏற்கும் நிலையில், தில்லி உயா் நீதிமன்ற நீதிபதிகளின் பலம் 48-ஆக அதிகரிக்கும்.