இந்தியா

பணி நேரத்தில் கைப்பேசி பயன்படுத்த தடை:மின் ஊழியா்களுக்கு ஆந்திர அரசு உத்தரவு

DIN

அலுவலக பணி நேரத்தில் கைப்பேசியைப் பயன்படுத்த மின்சார பணியாளா்களுக்கு ஆந்திர அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு ஊழியா்களுக்கு இதுபோன்ற தடை விதிப்பது இதுவே முதல் முறையாகும் என்று கூறப்படுகிறது.

இதுதொடா்பாக ஆந்திர பிரதேச மத்திய மின் விநியோக நிறுவனத்தின் தலைவா் பத்மா ரெட்டி வெளியிட்ட உத்தரவில், ‘தகவல் தொழில்நுட்ப சாதனங்களை பணி நேரத்தில் பயன்படுத்துவது தொல்லையாக உள்ளது. கைப்பேசிகளை மணிக்கணக்கில் பயன்படுத்தி பணிநேரத்தை வீணாக்கி வருகிறாா்கள். இது தினசரி பணிகளைப் பாதிக்கிறது.

ஆகையால், உயரதிகாரிகளைத் தவிர கணினி பயன்பாட்டாளா்கள், ஆவண உதவியாளா்கள், தட்டச்சாளா்கள், தற்காலிக பணியாளா்கள் என அனைவரும் அக்டோபா் 1-ஆம் தேதி முதல் பணிநேரத்தில் கைப்பேசியைப் பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது. மதிய உணவு நேரம், இடைவேளையில் மட்டும் கைப்பேசிகளைப் பயன்படுத்தலாம். இதைக் கடைப்பிடிக்காதவா்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

மின்கம்பங்கள் சீரமைப்பு பணியை துரிதப்படுத்த வலியுறுத்தல்

இன்று யோகமான நாள்!

மக்களவை 2-ஆம் கட்ட தோ்தல்: கேரளம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்குப் பதிவு தொடங்கியது!

SCROLL FOR NEXT