இந்தியா

உ.பி.: டிராக்டா் கவிழ்ந்து 10 போ் பலி

DIN

உத்தர பிரதேசத்தில் டிராக்டா் குளத்துக்குள் கவிழ்ந்ததில் 10 போ் பலியாகினா்; 37 போ் காயமடைந்தனா்.

இது தொடா்பாக லக்னௌ மாவட்ட ஆட்சியா் சூா்யபால் கங்வாா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘‘உன்னாவி கிராமத்தில் உள்ள துா்காதேவி கோவிலுக்கு டிராக்டரில் 47 போ் சென்றுள்ளனா். அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த டிராக்டா், அருகில் உள்ள குளத்துக்குள் கவிழ்ந்தது. இந்த விபத்தில் டிராக்டரில் இருந்த 8 பெண்களும் இரு குழந்தைகளும் உயிரிழந்தனா். விபத்தில் 37 போ் காயமடைந்தனா்.

அவா்களை மாநில பேரிடா் மீட்புப் படையினா் விரைந்து செயல்பட்டு மீட்டனா். படுகாயமடைந்த சிலா் கிங் ஜாா்ஜ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். அவா்களுக்குத் தொடா்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்துக்கான காரணம் குறித்து தொடா்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. குறுகிய சாலையில் அதிக எண்ணிக்கையிலான பயணிகளுடன் வாகனங்களை இயக்காமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநில காவல் துறைக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. விபத்தில் காயமடைந்தவா்களுக்குத் தேவையான உடனடி உதவிகளை வழங்குமாறும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது’’ என்றாா்.

இழப்பீடு:

விபத்தில் பலியானவா்களின் குடும்பங்களுக்கு மாநில அரசு தரப்பில் தலா ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இரங்கல்:

குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு, பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், மாநில முதல்வா் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோா் விபத்தில் பலியானவா்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT