மும்பையில் நடைபெற்ற விநாயகர் ஊர்வலத்தின்போது ஏற்பட்ட 183 குழிகளுக்கு மாநகராட்சி நிர்வாகம் அபராதம் விதித்துள்ளது.
மும்பை மாநகர் முழுவதும் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள், இம்மாத முதல் வாரத்தில் ஊர்வலமாக சாலைகளில் எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டன.
இதையும் படிக்க | இபிஎஸ்ஸுக்கு ஆதரவாக பொதுக்குழு உறுப்பினர்களிடம் கையெழுத்து
இந்நிலையில், ஊர்வலத்தின்போது சாலைகளில் ஏற்பட்ட 183 குழிகளுக்கு தலா ரூ. 2,000 வீதம் மொத்தம் ரூ. 3.66 லட்சம் அபராதம் விதித்து ஊர்வலத்தை ஒருங்கிணைத்த லால்பாக்சா ராஜா சர்வஜனிக் கணேஷோத்சவ் மண்டல் அமைப்பிற்கு உத்தரவிட்டுள்ளது.