இந்தியா

உத்தரகண்ட் பனிச்சரிவு: உயிரிழந்தோர் குடும்பத்திற்கு பிரதமர் இரங்கல்

DIN

உத்தரகண்ட் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

பனிச்சரிவில் சிக்கியவர்களின் நிலை குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இது குறித்து பிரதமர் அலுவலக ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் கூறியதாக கூறியிருப்பதாவது: “ நாம் விலைமதிப்பில்லாத பல மலையேற்ற வீரர்களை இழந்துள்ளோம். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பனிச்சரிவில் சிக்கியவர்களின் நிலை குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது”. எனப் பதிவிடப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துள்ளார். அதில், உத்தரகண்ட் மாநில பனிச்சரிவு விபத்தில் பலர் உயிரிழந்துள்ளது மனதிற்கு வேதனையளிக்கிறது. அவர்களது நினைவால் வாடும் அவர்களது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். பனிச்சரிவில் காணாமல் போனவர்கள் விரைவில் மீட்கப்பட வேண்டும் என நான் பிரார்த்தனை செய்து கொள்கிறேன். இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் நலம் பெற வேண்டும் என பிரார்த்திப்பதாகவும் தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணிப்பூரில் வன்முறை: 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழப்பு

ஈரோட்டில் மரக்கடை, பர்னிச்சர் கடையில் தீ: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

ரூ.4 கோடி சிக்கிய வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT